இவ்வருடம் தரம் 10, 11 இல் கற்கின்ற மாணவர்களைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களும் (தரம் 1-9) நாளை தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச பாடநூல் அனைத்தையும் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டு புதிய பாடநூல்களை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகன்றீர்கள்.
மேலும், புதிய பாடநூல் வழங்கப்பட இருப்பதனால் நாளைய தினம் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு கட்டாயமாக சமூகம் தருமாறு வலியுறுத்தப்படுகின்றீர்கள். *அதிபர்*
Admission of new students for Grade 06 in 2026
Admission of new students for Grade 06 in 2026
எமது பாடசாலையில், 2026 இல் தரம் 6 க்கு புதிய பெண் மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
கற்க தகைமையுள்ள மாணவிகள், நாளை (19.12.2025) முதல் பாடசாலையில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
பூரணமாக நிரப்பிய விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் பாடசாலையில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
*விண்ணப்ப முடிவுத் திகதி: 28.22.2025*
ANNOUNCEMENT OF SCHOOL REOPEN
ANNOUNCEMENT OF SCHOOL REOPEN
Providing learning materials to our brother students affected by natural disasters
Providing learning materials to our brother students affected by natural disasters
அன்புள்ள பெற்றார்களே, மாணவர்களே நலன் விரும்பிகளே!
*இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதர மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதல்*
எமது நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதர மாணவர்கள் தங்களின் கற்றல் உபகரணங்கள் இன்றி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் இக்கட்டான நிலைமைக்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவ வேண்டிய தார்மீக கடமையில் இருக்கின்றோம்..
எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான *கற்றல் உபகரணங்கள்* (புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், சீருடைகள் அல்லது சீருடைத் துணிகள், அப்பியாச கொப்பிகள் பென்கள், பென்சில்கள், ரப்பர்கள், காகிதங்கள் மற்றும் பிற கல்வி உபகரணங்கள்) வழங்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களால் முடிந்த அளவிற்குள் உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
*உங்கள் சிறிய உதவி கூட ஒருவர் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.*
உங்களது உதவிப் பொருட்களை எதிர்வரும் *15, 16 ஆம் திகதிகளில்* பாடசாலை உதவி சேகரிப்பு மையத்தில் அல்லது வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புக்குரிய பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை அடுத்தவர்களின் கஷ்டத்தில் உதவி செய்கினற மனப்பான்மையை வளர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு உங்கள் பிள்ளைகளிடம் கற்றல் உபகரணங்களை வாங்கிக் கொடுத்து உங்கள் பிள்ளைகளின் நற்பண்புகளை வளர்ப்பதற்கும் உதவி செய்து பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் உதவி செய்ய முன் வாருங்கள்.
"கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்பவனுக்கு உதவுபவனாக இரு, நான்காமவனாக (அழிந்துபோனவன்) இருந்துவிடாதே" என்பது ஒரு நபிமொழியாகும்.
பாடசாலையின் முன்னேற்றத்திற்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்த அதிபர் – திரு. பி. முஹாஜிரீன்
எமது அன்புக்குரிய அதிபர், திரு. பி. முஹாஜிரீன் அவர்கள், எமது பாடசாலையின் தலைமைப் பொறுப்பை ஏற்று இன்றுடன் மூன்று ஆண்டுகளை சாதனைகள் நிறைந்த வெற்றிகரமான காலமாக நிறைவு செய்கிறார்.
இந்த மூன்று ஆண்டுகள் எமது பாடசாலையின் மறுமலர்ச்சி மற்றும் வெற்றியின் காலக்கட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு. முஹாஜிரீன் அவர்கள் பொறுப்பேற்ற அந்த நாளில், பாடசாலை பல சவால்களை எதிர்கொண்டிருந்தது. ஆனால், அவரது தொலைநோக்குப் பார்வை, உறுதியான வழிநடத்தல் மற்றும் தீவிரமான செயற்பாடு அர்ப்பணிப்பு ஆகியவை, அந்தச் சவால்களை வெற்றி கொள்ள பெரும் காரணிகளாக அமைந்தன.
அவரது தலைமையில் நிகழ்த்திய அரும்பணிகள்:
அதிபர் முஹாஜிரீன் அவர்களின் தலைமையின் கீழ், எமது பாடசாலை ஒரு பல்முகத் திறன் மிக்க கல்வி நிறுவனமாக உருமாறியது. குறிப்பாக கீழ்க்காணும் துறைகளில் அற்புதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன:
1. பகிரங்க பொதுப் பரீட்சை சாதனைகள் (Academic Excellence):
பாடசாலையின் கல்வி சித்தி வீதம் கணிசமாக உயர்ந்தது. பொதுத் தரப் பரீட்சைகளில் மாணவர்களின் பெறுபேறுகள் வேகமாக வளர்ச்சி கண்டன.
க.பொ.த சா/த பரிட்சையில் (GCE O/L Exam) அனைத்து மாணவர்களும் 100 வீத சித்தியைப் பெற்று உயர் தரம் கற்பதற்கு தகைமை பெற்றுள்ளனர்.
உயர்தரப் பரிட்சையில் (GCE A/L Exam) அனைத்து மாணவர்களும் 100 வீத சித்தியைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
2. இணை பாடவிதான செயற்பாடுகள் (Co-curricular Activities):
மாணவர்களின் திறன்கள் கல்வியின் புலத்திற்கு அப்பாற்பட்டும் வெளிப்படுத்தப்பட்டன. மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் எமது மாணவர்கள் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, பாடசாலைக்கு புகழ் சேர்த்தனர்.
தேசிய மட்ட சித்திரப் போட்டிக்கு இரண்டு மாணவர்களும் (Graphics design, Landscape) தேசியமட்ட ஆங்கிலத் தினப் போட்டிக்கு ஒரு மாணவரும் (Cursive Writing) தெரிவு செய்யப்பட்டமை பாடசாலைக்கு கிடைத்த மிகப் பெரும் கௌரவம் ஆகும்.
மாகாணமட்ட போட்டிக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது (தமிழ், ஆங்கிலம், சமூக விஞ்ஞானம், கணிதம், விளையாட்டு).
3. ஆசிரியர் சமூகத்தின் வளர்ச்சி:
ஆசிரியர்கள் மத்தியில் ஒற்றுமை, உற்சாகம் மற்றும் புதுமைச் சிந்தனை வளர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த ஒரு ஆக்கபூர்வமான சூழல் உருவாக்கப்பட்டது.
4. கட்டமைப்பு மற்றும் சூழல் அழகு:
பாடசாலையின் கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் அழகு மற்றும் ஒழுங்கமைப்பு ஆகியவை புதிய அடையாளம் பெற்றன. ஒரு கற்றலுக்கு ஏற்ற அழகான, பாதுகாப்பான சூழல் உருவானது.
5. சமூக ஒத்துழைப்பு:
பெற்றோர் மற்றும் சமூக நிறுவனங்களுடன் சேர்ந்து சிறந்த ஒத்துழைப்புச் சூழல் உருவாக்கப்பட்டது. இது பாடசாலையின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது.
6. மாணவர் ஒழுக்க மேம்பாடு:
மாணவர்களின் ஒழுக்கம், பண்பாடு மற்றும் சமூக உணர்வு சிறப்பாக வளர்க்கப்பட்டது. இது அவர்களை சமூகத்தின் நல்ல குடிமக்களாக வளர்வதற்கான அடிப்படையை ஊன்றியது.
திரு. பி. முஹாஜிரீன் அவர்களின் இந்த அர்ப்பணிப்புமிக்க பணி (tireless contribution) எமது அனைவரினதும் மரியாதைக்கும், மனமார்ந்த நன்றிக்கும் உரியது. எனவே, இந்த முக்கியமான தருணத்தில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, ஆசிரியர் குழு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் சமூகம் ஆகிய அனைவரின் சார்பாக, அதிபர் திரு. பி. முஹாஜிரீன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியையும், அகம் நிறைந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது பாடசாலை கல்வியின் உயரிய உச்சங்களைத் தொடும் வகையில் திகழ, அவரது இந்த வழிகாட்டலும், அர்ப்பணிப்புமிக்க சேவையும் தொடர்ந்து நீடிக்க, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
The "Awards Ceremony" for the students who won the competitions (2024/2025) organized by the Addalaichenai Divisional Council to mark the National Reading Month was held today at the Divisional Council premises.
The first orientation meeting for the parents of the 2026 Grade 1 students was held today at the auditorium of Ak/Al-Hidayah Ladies' College. The event was presided over by the College Principal, Mr. M.T.M. Siyath.
A professional development workshop and competition for the students of Addalaichenai Ak/Al-Muneera Girls' High School and KM/Al-Hidaya Ladies' College- Palamunai was held today at Al-Muneera Girls' High School.